Thursday, October 13, 2011

ஒற்றைக்கால் கொக்கு

மணல் மேடுகளில்தான் எண்ணங்களை செதுக்கின்றேன்
காற்றில் பட்டு கறைந்துவிடக்கூடும்
கற்களில் செதுக்க நானொன்றும் சிற்பியல்ல
ஒரு நீண்ட புளியமரத்தில் அமர்ந்திருக்கும்
ஒற்றைக்கால் கொக்கு
ஓடைவற்றும்வரை காத்திருக்ககமுடியாது
சலனமற்ற நீர்த்துளிகளில்தான் முகம்கழுவ வேண்டுமா?
காற்றோடு மிஞ்சிபோகும் எண்ணம்களும்
காற்றினால் அடித்துசெல்லும் எண்ணகளும்
மணல்மேடுகளில்தான் அதிகம்போலும்.
நீண்டுவளர்ந்த புளியமரமோ வற்றாத ஓடையோஇனி
வாழ்வின் எல்லைகளில்தான்
மீதமிருக்கும் நாட்களோடு காத்த்திருக்கிறன்
ஒற்றைக்கால் கொக்காய்

Wednesday, February 23, 2011

கனவுகளும் நானும்

ஒரு நீண்ட காகிதத்தில் சிதறிக் கிடக்கின்றன என் கனவுகள்
சஹாராவின் சுடுமணலில் சிறு மண்புழுவாய்
துடித்து துடித்து நகர்கிறது சில
ஒரு கோப்பை சுடுநீர் வாங்கி
கனவுகளை கழுவப் போகிறான் நண்பன்
பாவம் கனவுகளின் வலியை உணரமாட்டான்

காகிதத்தை கத்தரித்து கனவுகளை குறை
அவன் சொல்லும் மந்திரம் எனக்கு
கத்தரித்த கனவுகள் இரவுகளில் ஒட்டிக்கொள்ளவது
புரியாத புதிர் எனக்கு